search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவு நீர்"

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் சேலத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.
    • போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் துணை மேயர் சாரதா தேவி, கமிஷனர் (பொறுப்பு) அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் கவுன்சிலர் இமயவரம்பன் பேசுகையில் பட்டியலின மக்களுக்கு திருமணம் நடத்த சேலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேயர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    அந்த மண்டபத்தின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் சேலத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.

    அதற்கு பதிலளித்து மேயர் ராமச்சந்திரன் பேசுகையில் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கவுன்சிலர் திருஞானம் பேசுகையில் எனது வார்டில் மழை நீர் அதிக அளவில் தேங்குகிறது. மேலும் அம்மாபேட்டையில் இருந்து டவுன் வரை சாலையோர கடைகள் அதிக அளவில் உள்ளன. இதனால் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் மூர்த்தி பேசுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடிகள் வெகு தூரத்தில் உள்ளன. இதனால் அந்தந்த பகுதி மக்களுக்கு அருகிலேயே வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் சையத் மூசா பேசுகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். இதற்கு சாக்கடை நீரும், மழை நீரும் அதிகளவில் தேங்குவது தான் காரணம். அதனை சீரமைக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் பி.எல்.பழனிச்சாமி பேசுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட மணியனூர் பகுதியில் சுடுகாடு தண்ணீர் மற்றும் கழிவறை தண்ணீர் அதிக அளவில் தேங்குகிறது. இதனால் மக்கள் தவித்து வருகிறார்கள். நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் விபத்தும் அடிக்கடி நடக்கிறது, சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனையும் சீரமைக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் ஏ.எஸ்.சரவணன் பேசுகையில் களரம்பட்டி 4-வது தெருவில் சாலை, சாக்கடை வசதி, பாலப்பணி செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 45-வது கோட்டத்தில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். 56-வது வார்டு கலைஞர் நகரில் 4-வது வார்டு மற்றும் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். 60 வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும். அப்போது தான் சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக திகழும் என்றார்.

    கவுன்சிலர் கோபால் பேசுகையில் அம்பாள் ஏரி ரோடு கடந்த 1 1/2 ஆண்டாக மிக மோசமான நிலையில் உள்ளது. தாதகாப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் தண்ணீர் வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குடி தண்ணீர் வசதி வழிப்பாதைகள் அமைக்க வேண்டும் என்றார்.

    இதை தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

    • செப்டிக் டேங்க் கழிவுநீரினை திறந்த வெளியிலோ, நீர்நிலைகளிலோ, இதர பகுதிகளிலோ சுத்திகரிக்கப்படாமல் விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
    • பணியாளர்களை உள்ளே இறக்கி பணி மேற்கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சிக்கான கழிவுநீர் மேலாண்மை முறைபடுத்துதல் சட்டம் 2022-ஐ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி செப்டிக் டேங்க் கழிவுநீரினை திறந்த வெளியிலோ, நீர்நிலைகளிலோ, இதர பகுதிகளிலோ சுத்திகரிக்கப்படாமல் விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை அடுத்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கண்ட துறையின் அரசாணை வெளியிடப்பட்டதில் திருப்பூர் மாநகர பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் கழிவுநீர் வாகனங்கள் திருப்பூர் மாநகராட்சியில் பதிவு செய்து, உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். வாகனங்களின் தினசரி செயல்பாட்டினை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தில் மேற்கண்ட கருவியினை பொருத்திக்கொள்வது கட்டாயமாகும். மேலும் மாநகராட்சி அனுமதி பெறாத வாகனங்கள் 30.6.2023 முதல் மாநகராட்சி எல்லைக்குள் இயக்க அனுமதிக்கப்படமாட்டாது. தவறும் பட்சத்தில் மேற்படி அனுமதி பெறாத வாகனங்கள் மாநகராட்சிகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருப்பூர் மாநகராட்சி, பல்லடம் மற்றும் திருமுருகன்பூண்டி நகராட்சி எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவுநீரினை திருப்பூர் தெற்கு ரோட்டரி மின் மயானம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரேற்று நிலையத்தில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் மட்டுமே கழிவுநீரினை விட வேண்டும். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை இயந்திரங்களின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

    பணியாளர்களை உள்ளே இறக்கி பணி மேற்கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.மேலும், மாநகராட்சி மைய அலுவலகத்தில் கழிவுநீர் மேலாண்மை திட்டம் மற்றும் பாதாளசாக்கடை திட்டங்களுக்கென்று "14420" என்ற கட்டணமில்லா தொலைபேசி அழைப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் ஏற்படும் கழிவுநீர் கால்வாய்களில் எற்படும் அடைப்புகள் மற்றும் பாதாள சாக்கடை அடைப்புகள் தொடர்பான புகார்கள் இவ்வழைப்பு மையத்தை தொடர்பு கொண்டு தங்கள் பதிவுகள் மற்றும் புகார்களை பதிவு செய்து கொள்ளவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கசடு கழிவுநீர் சுத்தம் செய்ய பெறப்படும் அழைப்புகள் இம்மாநகராட்சியில் பதிவு பெற்ற கழிவுநீர் வாகன உரிமையாளர்களுக்கு உடனடியாக தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இப்பணிகளில் ஈடுபடும் கள பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி அவர்களுக்கு காப்பீட்டு வசதியும் செய்து தருவது சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் பொறுப்பாகும். வாகனங்கள் கழிவுநீரேற்று நிலைய வளாகத்திற்குள் தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் பொது மக்கள் தங்கள் சந்தேகங்களை இம்மாநகராட்சி மைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 14420 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெளிவுபடுத்தி க்கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் கழிவு நீர் குளம் போல் தேங்கியது.
    • கழிவு நீருக்குள் செல்வதால் ஊழியர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சாலைத் தெரு ஸ்டேட் பாங்க் எதிரில் மின் வாரியத்தின் நான்கு டிரான்ஸ்பார்மர் உள்ளன. இங்கு 1700 கே.வி உயரழுத்த மின்சாரம் இந்த மின் மாற்றிகள் வழியாக செல்கி றது.

    இந்த பகுதியில் நகராட்சி பாதாள சாக்கடையில் வெளியேறும் கழிவு நீர் டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் குளம் போல் தேங்கியுள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் கழிவு நீரை அகற்றி சீரமைக்கப்படவில்லை.

    இந்தப் பகுதியில் உயரழுத்த மின்சாரம் செல்வதால் பீஸ் போனால் கூட மின்வாரிய ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த டிரான்ஸ்பார்மர் பாதாள சாக்கடைக்குள் உள்ளதால் மின் விபத்து அச்சத்தில் பழுது ஏற்பட்டால் சீரமைக்க முடியாத நிலை உள்ளது.

    மேலும் சுற்றிலும் கழிவு நீர் தேங்கியுள்ளதால் மின்கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஏற் பட்டால் மின் வாரிய ஊழியர்கள் மட்டுமின்றி அந்தப்பகுதியில் பொது மக்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

    மின் வாரிய உதவிப் பொறியாளர் வெற்றிவேல் கூறியதாவது:-

    பாதாள சாக்கடை கழிவு நீர் மேன் ஹோல் வழியாக வெளியேறி மின் மாற்றிப் பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது. இப்பகுதியில் உயரழுத்த மின்சாரம் செல்கிறது. இதனால் டிரான்ஸ் பார்மரில் பழுது ஏற்பட் டால் கூட சீரமைக்க முடிவ தில்லை. மின் வாரிய ஊழியர்கள் அச்சப்படு கின்றனர். கழிவு நீருக்குள் செல்வதால் ஊழியர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது என்றார்.

    • பெருமாநல்லூர் ஊராட்சியில் மெயின் ரோட்டில் இருந்து 100 அடி தூரத்துக்கும் மேல் குழி தோண்டி உள்ளார்கள்.
    • கழிவுநீர் கால்வாயும் அமைக்கவில்லை. அடுத்த 300 அடிக்கு மேல் கால்வாய் அமைத்துள்ளார்கள்.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் காலனி, கே.எம்.சி. பப்ளிக் ஸ்கூல் எதிரில் உள்ள தெருவில் மத்திய அரசு நிதியில் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பே கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பெருமாநல்லூர் ஊராட்சியில் மெயின் ரோட்டில் இருந்து 100 அடி தூரத்துக்கும் மேல் குழி தோண்டி உள்ளார்கள். ஆனால் கால்வாய் அமைக்க வில்லை. அடுத்த 200 அடிக்கு மேல் குழியும் தோண்டவில்லை. கழிவுநீர் கால்வாயும் அமைக்கவில்லை. அடுத்த 300 அடிக்கு மேல் கால்வாய் அமைத்துள்ளார்கள். அதன் தரம் மிகவும் மோசமாக உள்ளது. மேலும் கால்வாயில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது. வீடுகளே இல்லாத பக்கம் கால்வாய் நேர்கோட்டில் இல்லாமல் வளைந்தும், நெளிந்தும் போடப்பட்டுள்ளது. இது அமைத்ததன் நோக்கமே புரியாமல் அந்த தெருவில் உள்ள மக்கள் புலம்பி தவிக்கிறார்கள். வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் கால்வாய் அமைக்காமல் ஊருக்கு ஒதுக்குப்புறம் குறைந்த வீடுகளே உள்ள பகுதியாக தேர்ந்தெடுத்து பாதி பகுதிக்கு மட்டும் கழிவுநீர் கால்வாய் அமைத்ததால் நிதி முறைகேடு ஏற்பட்டு இருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கிறார்கள். எனவே இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம். மேலும் திருப்பூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுமக்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தகவலை திருப்பூர் மாவட்டம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. பொது செயலாளர் பா.குமார் தெரிவித்துள்ளார்.

    • கழிவுநீர் தேங்கி நிற்பதால் இங்கு கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது.
    • கழிவுநீர் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்

    பல்லடம்:

    பல்லடம் அண்ணா நகர் பகுதியில், சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாநகர் மேற்குப்பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்றும் இதனால் கழிவுநீர் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    அண்ணாநகர் மேற்குப் பகுதியில் முறையான கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால் இங்குள்ள தாழ்வான பகுதியில் கழிவு நீர் குளம் போல் தேங்கி விடுகிறது. மேலும் மழை பெய்தால் இங்கு மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால் இங்கு கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. இங்குள்ள ஆழ்குழாய் கிணறு அருகே கழிவுநீர் தேங்குவதால் ஆழ்குழாய் கிணற்று மூலம் வரும் நீரும் கழிவு நீராகவே வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவு நீர் கால்வாய் அமைத்து இந்தப் பகுதியில் கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கழிவறை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அந்த நீர் சிகிச்சை பெறுவோர் வார்டில் புகுந்ததது
    • பிறகு ஊழியர்கள் வரவழைத்து அதை சரிசெய்துவிட்டோம் என்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு நோயாளிகள் வார்டுகள் உள்ளது. நேற்று நள்ளிரவு பெண் நோயாளி கள் தங்கி இருந்த வார்டு ஒன்றில், கழிவறை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அந்த நீர் சிகிச்சை பெறுவோர் வார்டில் புகுந்ததது. இதனால் அவதியடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் வார்டில் புகுந்த கழிவுநீரை சுத்தம் செய்தனர். முழு மையாக வெளியேற்றாத கழிவுநீர் துர்நாற்றத்தில் நோயாளிகள் இரவு முழுவதும் அவதி யடைந்தனர். விடிந்தபிறகு, ஆஸ்பத்திரி துப்புரவு ஊழியர்கள் வந்து முழுமையாக சுத்தம் செய்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறும் போது, நோயாளிகள் போட்ட குப்பைகள், கழிவு நீர் செல்லும் குழாயில் அடைத்து கொண்டதால், நீர் வார்டில் புகுந்துவிட்டது. அதிகாலை என்பதால், ஊழியர்கள் இல்லை. பிறகு ஊழியர்கள் வரவழைத்து அதை சரிசெய்துவிட்டோம் என்றனர்.

    • நீரை பயன்படுத்திய பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
    • நிலத்தடி நீர் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக சாய கழிவு நீராக வெளியேறிக்கொண்டு இருக்கிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை மற்றும் பெருந்துறை பகுதிகளில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு 2,700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்து உள்ளது.

    இந்த சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் அதிக அளவில் சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினால் சிப்காட் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டு பொது மக்களும், கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆனது. இந்த நீரை பயன்படுத்திய பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    மேலும் மழை காலங்களில் இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் அப்பகுதியில் உள்ள குளங்களுக்குச் செல்லும் நீர்வழிப் பாதைகளும் குளங்களும் கழிவு நீரினால் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

    இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ஆலை நிர்வாகமே பூஜ்ஜியம் முறையில் மறுசுழற்சி செய்து வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த தொழிற்சாலை வளாகம் இருக்கக்கூடிய பகுதிகளில் ஏற்கனவே விவசாயிகள் அமைத்திருந்த ஆழ்துளை கிணறுகள் மூலமாக வெளியேற்றப்பட்ட கழிவுநீர் நிலத்தடியில் இன்னும் இருப்பதால் மழை க்காலங்களில் நிலத்தடி நீர் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக சாய கழிவு நீராக வெளியேறிக்கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவின் படி குளத்திற்கு செல்லும் நீர்வழி பாதை மற்றும் பல இடங்களில் நிலத்தில் தேங்கி நிற்கின்ற கழிவு நீரை புதிய முயற்சியாக டேங்கர் லாரிகள் மூலமாக அந்த கழிவு நீரை சேகரித்து தொழிற்சாலைகளுக்கு எடுத்து சென்று அங்கு அமைக்கபட்டுள்ள ஜீரோ டிஸ்சார்ஸ் முறையில் சுத்திகரிப்பு எந்திரம் மூலமாக சுத்திகரிப்பு செய்து மீண்டும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கே எடுத்துக்கொள்ளும் புதிய முயற்சியை மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலமாக தொடங்கி உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த முயற்சி நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும். மேலும் இதற்கு இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

    மேலும் இங்கு வசிக்கும் மக்கள் கூறும்போது:-

    இப்பகுதியில் உள்ள குளத்திற்கு செல்லும் நீர்வழி பாதையை கான்கிரீட் பாதையாக மாற்றி தடுப்பணை அமைத்து மழை காலத்தில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். கழிவு நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கைகளை தொழிற்சாலை நிர்வாகமும், மாசுகட்டுப்பாட்டு வாரியமும் எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

    மாசுகட்டுப்பாட்டு வாரி யம் எடுத்துள்ள இந்த புதிய முயற்சி பலன் அளிக்குமா என்பது பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    • சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை நீர்நிலைகளில் திறந்து விடுகின்றனர்.
    • சாயக்கழிவுகளை கலந்துவிடும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயம் காக்க வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை துறையின் அங்கமாக உள்ள சாய ஆலைகள், பிரிண்டிங், வாஷிங் நிறுவனங்கள் தொடங்குவதற்கு முன் சாயக்கழிவுநீரை ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்க வேண்டும் என பல விதிமுறைகளுக்கு உட்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.

    ஆனால் சில நிறுவனங்கள் அனுமதி பெறாமலே குடோன்கள் மற்றும் வீடுகளில் பிளாஸ்டிக் டிரம் மூலம் பட்டன், ஜிப் போன்றவற்றுக்கு சாயமேற்றுகின்றனர். பின்னர் சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை நீர்நிலைகளில் திறந்து விடுகின்றனர். அவ்வாறு திருப்பூர் ராயபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் கலந்த சாயக்கழிவுநீரால் ஆற்றுநீர் நிறம் மாறி நுரையுடன் பாய்ந்தது.

    இதனால் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் நீரை பாசனத்திற்கு பயன்படுத்தும்போது பயிர்கள் காய்கின்றன. இதனால் ஆற்றுநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

    எனவே மாசுக்கட்டுபாட்டு வாரியம் சாயக்கழிவுகளை கலந்துவிடும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயம் காக்க வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு அந்த கருவி செயல்படுவதையும் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவுகள் அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும்.
    • விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்பட்டால் முதல் முறைரூ. 25 ஆயிரம் மேலும் இரண்டாவது முறை கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    பல்லடம்:

    பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம், வெள்ளகோயில், திருமுருகன்பூண்டி, ஆகிய 6 நகராட்சிகளில் இயங்கும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு சட்ட விதிகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பல்லடம் நகராட்சி ஆணையாளர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

    நகராட்சிகளின் மண்டல தூய்மை பாரத திட்ட பொறுப்பாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். பல்லடம் நகர சுகாதார அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார்.பல்லடம் சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், சத்தியசுந்தர்ராஜ், மேற்பார்வையாளர்கள் நாராயணன், செந்தில்குமார், மற்றும் உடுமலை, காங்கேயம், உள்ளிட்ட 6 நகராட்சிகளின் சுகாதாரஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டு செல்லத்தக்க வாகன உரிமம் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம். உரிமம் பெற்றவர்களை தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மனித கழிவுகள், மற்றும் கழிவு நீரை கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுவது சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. நகராட்சியால் வழங்கப்படும் இந்த உரிமத்தை வாகனத்தின் முன்புறம் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். உரிமம் பெற்றவர்கள் குறிப்பிட்டுள்ளபடி நேரம், வழித்தடம் ஆகியவற்றை பின்பற்றி குறிப்பிடப்பட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன், அந்த கருவி செயல்படுவதையும் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவுகள் அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும். உரிமத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி, விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்பட்டால் முதல் குற்றத்திற்கு ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 2வது மற்றும் தொடர் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர் குற்றங்களை செய்தால் உரிமத்தை இடைநிறுத்தல் அல்லது ரத்து செய்வதோடு, குறிப்பிட்ட கருவி அல்லது உபகரணங்கள் உள்ளிட்ட எந்த ஒரு வாகனத்தையும் அல்லது பிற பொருட்களையும் பறிமுதல் செய்யவும் வழிவகை உள்ளது. அகற்றப்படும் கழிவுகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும்.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் தங்கி குழந்தை பெற்று செல்கின்றனர்‌.
    • தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் கழிவு நீர் முழுவதும் ஓடி குளம் போல் தேங்கி உள்ளது.

    கடலூர்:

    கடலூரில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் அறுவை சிகிச்சை, கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனை வளாகத்தில் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு பிரிவு செயல் பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் தங்கி குழந்தை பெற்று செல்கின்றனர். இதனால் மகப்பேறு பிரிவிற்குள் செருப்புகள் அணிந்து செல்லாத வகையில் மிக பாதுகாப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    ஆனால் மகப்பேறு பிரிவு முன்பு உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவுநீர் நிரம்பி தற்போது மகப்பேறு பிரிவு முன்பு ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் கழிவு நீர் முழுவதும் ஓடி குளம் போல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக மகப்பேறு பிரிவு முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு இதனை பார்த்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கொசு உற்பத்தி பெருகி பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயமும் நிலவி வருகிறது.

    இது மட்டுமின்றி புதிதாக பிறந்துள்ள குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் கழிவு நீர் வெளியேறி உள்ளதால் பல்வேறு தொற்று நோய் மற்றும் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் இதனால் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் பொதுவெளியில் இது போன்ற நிலைபாடு இல்லாத வகையில் அந்தந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் மிகவும் பாதுகாப்பாக இருக்க கூடிய மருத்துவமனை வளாகம் மற்றும் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வரும் நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்டு வரும் நிர்வாகத்தை சமூக அலுவலர்கள் கண்டித்து உள்ளனர்.ஆகையால் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி இது போன்ற அவல நிலை வருங்காலங்களில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீரேற்று நிலையம் அமைந்து உள்ள பகுதியை சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
    • சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    மணலி அருகே உள்ள மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 3-வது பிரதான சாலையில் கழிவுநீ ரகற்றும் நிலையம் செயல்பட்டு வருகிறது. வீடுகளில் இருந்து வெளியேறக் கூடிய கழிவு நீர் பாதாள சாக்கடை வழியாக இந்த கழிவு நீரகற்று நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து பல்ஜிபாளையம் அருகே உள்ள பிரதான கழிவுநீர் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாதாள சாக்கடை வசதி இல்லாத இடங்களில், வீடுகளில் மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட கழிவுநீர் லாரிகள் மூலம் கழிவு நீர் எடுக்கப்பட்டு மாத்தூரில் உள்ள கழிவுநீரகற்றும் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு வெளியேற்றப்படுகிறது. தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கழிவுநீர் கொண்டு வரப்படுவதாக தெரிகிறது.

    இவ்வாறு தினந்தோறும் லாரியில் இருந்து கழிவுநீர் கொண்டுவரப்படுவதால் 2.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட இங்குள்ள நீரேற்றுநிலையம் முழுவதும் நிரம்பி உள்ளது. இதனால் நீரேற்று நிலையம் அமைந்து உள்ள பகுதியை சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கழிவுநீரகற்று நிலையத்துக்கு லாரியில் கொண்டுவந்து கழிவு நீரை ஊற்றுவதை தடை செய்ய வேண்டும். இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. சுவாச பிரச்சினை மற்றும் சுகாதாரகேடு ஏற்படுகிறது. எனவே லாரிகளில் கொண்டு வரும் கழிவு நீரை கொடுங்கையூரில் உள்ள நிலையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுபற்றி கழிவுநீரகற்று மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளோம் என்றனர்.

    இது குறித்து மணலி மண்டல குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் கூறும்போது, வீடுகளில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் கழிவுநீரை மாத்தூரில் உள்ள நிலையத்திற்கு கொண்டு வராமல் பல்ஜிபாளையத்தில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நேரடியாக கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.அதற்கான அனுமதி கிடைத்தவுடன் இங்கு லாரிகளில் கழிவு நீர் கொண்டு வரப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்படும் என்றனர்.

    • சாலையில் கழிவு நீரை கொட்டிய 10 டிராக்டர் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதியப்பட்டது.
    • கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ளன.

    இதன் அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை யிலும், நகராட்சி குப்பை கிடங்கிற்கு செல்லும் சாலை யோரங்களிலும் பட்டணம் காத்தான் மற்றும் சக்கரக் கோட்டை ஊராட்சி பகுதி வீடுகளில் இருந்து டிராக்டர் களில் எடுத்து வரப்படும் கழிவுநீரை அரசு புறம் போக்கு இடத்தில் அனுமதி யின்றி ஊற்றினர்.

    இது குறித்து பட்டணம் காத்தான் வி.ஏ.ஓ., ஜெயகாந் தன் புகாரில் பட்டிணம் காத்தான் இ.சி.ஆர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாரியத்திற்கு அருகேயுள்ள அரசு புறம் போக்கு காலி இடத்தின் அருகிலுள்ள மக்கள் குடியிருக்கும் பகுதி யில், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று தெரிந்தும், ககாதார சீர் கேட்டை ஏற்படுத்தி, சுற்றுபுற சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையிலும், நோய் தொற்று ஏற்படுத்தும் வகையில் கழிவு நீரை ஊற்றி வருகின்றனர். 10 டிராக்டர்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×